ஈராக் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டங்கள் : போராட்டக்காரர்களை விரட்டியடித்த போலீசார்
Jan 21 2020 8:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈராக் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களை துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் கலைத்தனர்.
ஈராக் அரசுக்கு எதிராக கடந்த அக்டோபர் மாதம் முதல் பல பகுதிகளில் இளைஞர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ஊழல், வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு காரணங்களை முன்வைத்து நடைபெறும் இப்போராட்டங்களில், பிரதமர் Adel Abdul-Mahdi-ன் அரசு பதவி விலகி புதிய அரசுக்கு வழிவிடவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. இப்போராட்டத்தின் போது நடந்த வன்முறைகளில் இதுவரை 450-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே, நேற்று நடந்த போராட்டத்தில் காவல் துறையினர் இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இன்றும் பாக்தாத், பஸ்ரா நகரங்களில் போராட்டக்காரர்கள் ஒன்று கூடினர். ஆனால், அங்கு வந்த போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கி சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.