தால் எரிமலையால் பாதிப்பு - மீட்கப்பட்ட விலங்குகள் : பண்ணையில் வைத்து பராமரிக்கும் தன்னார்வலர்கள்
Jan 22 2020 10:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிலிப்பைன்ஸ் நாட்டின் TAAL எரிமலையின் அருகே மீட்கப்பட்ட வீட்டு விலங்குகளை தன்னார்வலர்கள் இணைந்து பராமரித்து வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் டால் எரிமலை கடந்த சில நாட்களாக அதிக அளவில் சாம்பல், புகையை வெளிப்படுத்திவருகிறது. இதனால் எரிமலையின் அருகில் 15 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வசித்து வரும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் வீட்டு விலங்குகள் மற்றும் கால்நடைகளை விட்டு விட்டு வந்துவிட்டனர். இது குறித்த கவலைகளை சமூக வலைதளங்களில் அவர்கள் பகிர்ந்து வருவதை அறிந்த Renz Oliver Garcia என்ற இளைஞர், நண்பர்களுடன் இணைந்து அவற்றை மீட்டுப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். Felix Casba என்பவர் ஏற்கனவே தெருநாய்களைப் பரமரிக்கும் பணிகளை மேற்கொண்டுவரும் நிலையில், அவரது பண்ணையில் தற்போது நூற்றுக்கணக்கான ஆடு, முயல், நாய், புறாக்கள் போன்றவை பராமரிக்கப்பட்டுவருகின்றன.