சீனாவில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு - 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதால் நாடுமுழுவதும் உஷார் நிலை
Jan 23 2020 10:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டில் தற்போது 440 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்திருப்பதால் அங்கு மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. மருந்துகளுக்கு எதிரான தன்மையை இந்த வைரஸ் வளர்த்துக்கொள்வதால், சிகிச்சை அளிப்பதில் பெரும் சிக்கல் இருந்து வருகிறது. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் இந்த வைரஸ், சீன புத்தாண்டு விடுமுறை காரணமாக பயணங்களை மேற்கொண்டுள்ள கோடிக்கணக்கான பொதுமக்கள் மூலம் நாடு முழுவதும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூகன் நகரில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட காட்டு விலங்குகளின் இறைச்சியிலிருந்து இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது.