உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, 'இன்டர்நெட்' இணைப்பு கிடைக்க வேண்டும் - 'கூகுள்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆர்வம்
Jan 23 2020 11:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும், இலவசமான, வெளிப்படையான, 'இன்டர்நெட்' இணைப்பு கிடைக்க வேண்டும் என்று 'கூகுள்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. சுந்தர் பிச்சை கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும், உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், மருத்துவம், வானிலை போன்றவற்றில் செயற்கை நுண்ணறிவு தற்போது மிகச்சிறப்பான முறையில் பங்காற்றுவதை காண முடிகிறது எனகூறினார். செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, ஒரு நிறுவனம் அல்லது ஒரு தேசம் மூலம் பாதுகாப்பை பெற முடியாது என்றும், அதற்கு, உலகளாவிய கட்டமைப்பு தேவை என்றும் அவர் கூறினார்.