ஆஸ்திரேலிய காட்டுத் தீ கட்டுக்குள் வந்த பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகள் தீவிரம்
Jan 23 2020 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலிய காட்டுத் தீ, கட்டுக்குள் வந்த பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் கடந்த சில ஆண்டுகளாக நிலவிய கடும் வறட்சியைத் தொடர்ந்து, காடுகளில் அவ்வப்போது தீ பற்றி எரிவது தொடர் கதையாகி வருகிறது. நாட்டின் கிழக்கு பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்தது. மக்கள் நெருக்கம் மிகுந்த நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் அரசு போதுமான முனைப்பு காட்டவில்லை என்ற புகார்களுக்கு இடையே, தற்போது காட்டுத் தீ பல இடங்களில் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் பட்டுப்போன மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட மறு சீரமைப்புப் பணிகள் வேகமெடுத்துள்ளன.