அமெரிக்காவில் வாய் தகராறு முற்றியதில் துப்பாக்கி சூடு : ஒருவர் உயிரிழப்பு, காயமடைந்த 5 பேருக்கு சிகிச்சை
Jan 23 2020 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார், ஐந்து பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவில் பெரும்பாலானோர் துப்பாக்கி வைத்திருப்பதல் ஏராளமான துப்பாக்கி சூடுகள் நடப்பதை எப்போதுமே காணமுடிகிறது. சிகாகோ நகரில் ஒவ்வொரு நாளும் துப்பாக்கி சூட்டில் குறைந்தது ஒருவர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்று வாஷிங்டன் மாநிலத்தின் சியாட்டில் நகரில் நடந்த இது போன்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார், 9 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர். மக்கள் நெருக்கம் மிகுந்த வணிக வளாகம் ஒன்றின் முன்னால் இருவருக்கு இடையில் வாய் தகராறு முற்றி இந்த சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் மற்றும் அவருடன் இருந்த நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.