2030-ம் ஆண்டு 6ஜி தொழில்நுட்பத்தை வெளியிடுவதாக ஜப்பான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
Jan 23 2020 8:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2030-ம் ஆண்டு 6ஜி தொழில்நுட்பத்தை வெளியிடுவதாக ஜப்பான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் இன்னும் 5ஜி தொழில்நுட்பமே பரந்து விரிவடையாத சூழலில் இன்னும் 10 மடங்கு அதிவிரைவான 6ஜி-க்கு ஜப்பான் தயாராகி உள்ளது. இதற்காக ஜப்பான் மத்திய உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சிறப்பு ஆராய்ச்சி கமிட்டியை உருவாக்கியுள்ளது. இந்த ஆணையத்தின் தலைமை பொறுப்பு டோக்கியோ பல்கலைக்கழகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஆலோசனை உறுப்பினர்களாக NTT மற்றும் டோஷிபா நிறுவனத்தனர் இணைய உள்ளனர். 5ஜி தொழில்நுட்பத்துக்காக ஜப்பானின் அடித்தள நிதி 200 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இந்நிலையில் இன்றைய மதிப்பில் 2030-ல் அறிமுகமாக உள்ள 6ஜி-க்கு 20 மடங்கு அதிக நிதி தேவைப்படும் என தற்காலிகமாக கணிக்கப்பட்டுள்ளது.