கரோனா வைரஸ்- உலகளாவிய அவசரநிலை தேவையில்லை : உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் முடிவு
Jan 24 2020 2:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் வேகமாகப் பரவி வரும் வைரஸ் குறித்து உலகளாவிய மருத்துவ அவசரநிலை பிரகடனப்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பினால் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை.
சீனாவில் புதிய கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்டு இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர், 830 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 1072 பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வைரஸ் குறித்து உலகளாவிய சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தும் தேவை உள்ளதா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் ஒருமித்த முடிவை எட்டமுடியவில்லை. சீனாவுக்கு வெளியில் பாதிப்புக்கள் அதிக அளவில் இல்லாததால், உலகளாவிய மருத்துவ அவசரநிலை பிரகடனப்படுத்தவேண்டிய தேவையில்லை என கருதப்படுகிறது.