சீனாவில் வேகமாக பரவிவரும் கரோனா வைரஸ் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரிப்பு
Jan 26 2020 4:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் வேகமாக பரவிவரும் கரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 975 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, சீனாவின் வுகான் நகரில், புதிதாக பிரம்மாண்டமான மருத்துவமனையை கட்டப்பட்டு வருகிறது. ஆயிரம் படுக்கைகளைக் கொண்ட இந்த மருத்துவமனையை 6 நாட்களுக்குள் கட்சி முடிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது.
சீனாவை தொடர்ந்து அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்ட்ரா, கேரளா, தெலங்கானா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் சிலருக்கு கரோனா வைரஸ் காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.