கொரோனா வைரசுக்கான மருந்து கண்டுபிடிப்பு சீனா தீவிரம் - வேதியியல் கூடங்களில் நடைபெறும் தீவிர ஆராய்ச்சி
Jan 28 2020 3:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க சீனா தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தவோ அல்லது நோய் தாக்கம் ஏற்பட்ட பின் சிகிச்சை அளிக்கவோ இதுவரை நேரடியான எந்த மருந்துகளும் இல்லை. அதனால், சிகிச்சை அளிப்பதில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதே போல் வைரஸ் பரவுவதைத் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது. இதற்கிடையே, வைரசைக் கட்டுப்படுத்தும் மருந்துகளைக் கண்டறிவதில் சீனாவில் உள்ள பல்வேறு வேதியல் கூடங்கள் தீவிர முயற்சி எடுத்துவருகின்றன. இதுவரை, கொரோனா வைரசைத் தனிமைப்படுத்துவதில் போதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதால், விரைவில் நோயை குணப்படுத்துவதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.