நியூசிலாந்தில் வரும் செப்டம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் : பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவிப்பு
Jan 28 2020 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்தில் வரும் செப்டம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் என பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவித்துள்ளார்.
நியூசிலாந்தில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2017 ஆம் ஆண்டு பதவியேற்ற ஜெசிந்தா ஆர்டெர்ன், தீவிரவாதத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார். அவரது பெண்ணுரிமை உள்ளிட்ட கொள்கைகள் உலக நாடுகளில் வரவேற்பு பெற்றுள்ளன. இருப்பினும் வறுமை, வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்னைகள் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. இந்த சூழலில் வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி பொதுத் தேர்தலை நடத்த பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் முடிவு செய்துள்ளார்.