சீனாவில் கொரோனா எனப்படும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,631-ஆக உயர்வு
Feb 15 2020 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் கொரோனா எனப்படும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 631-ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 143 பேர் பலியாகிவுள்ளனர். சீனாவின் ஹூபெய் மாகாணம், வுஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் எனப்படும் கோவிட்-19 வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் பரவி உள்ளது. உலகம் முழுவதும் அவசர நிலையை அறிவித்துள்ள உலக சுகதார நிறுவனம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், சீனாவில், கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 631-ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 143 பேர் பலியாகிவுள்ளனர். சீனா முழுவதும் மொத்தம் 67 ஆயிரத்து 535 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.