சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காய்ச்சல் - பலி எண்ணிக்கை ஆயிரத்து 765 ஆக உயர்வு

Feb 17 2020 9:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில், ‍கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் காய்ச்சலில் பலியானோரின் எண்ணிக்கை, ஆயிரத்து 765 ஆக உயர்ந்துள்ளது.

அண்டை நாடான, சீனாவின் வூகான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் காய்ச்சல், கடந்த 2 மாதங்களாக சீன மக்‍களை மிகுந்த பீதியில் ஆழ்த்தி வருகிறது. சீனா மட்டுமின்றி, ஹாங்காங், ஃபிலிப்பைன்ஸ், தாய்லாந்து, தென்கொரியா, அமெரிக்கா, ஃபிரான்ஸ், கனடா உட்பட மேலும் 25 நாடுகளுக்‍கும் வைரஸ் பரவியதால், சர்வதேச அளவில் Corona Virus அச்சம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், Corona Virus காய்ச்சல் காரணமாக, சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை ஆயிரத்து 765-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 68 ஆயிரம் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிருப்பதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மருந்துகளை சீனா கொடுத்து குணப்படுத்த முயன்று வருகிறது. அதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பதாக சொல்லப்படுவதால், பாரம்பரிய சீன மருத்துவர்கள் 2 ஆயிரத்து 200 பேர், ஹுபே மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00