ஜெர்மனியில் இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழப்பு
Feb 20 2020 12:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜெர்மனியில் இருவேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். ஹனாவு நகரில் உள்ள இரண்டு விடுதிகளில் புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்தவர்கள் மீது திடீரென தூப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 8 பேர் பலியாகினர். 5 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், தடயங்களை கைப்பற்றி, தாக்குதல் நடத்திய மர்மநபர்களை தேடி வருகின்றனர். மேலும், தாக்குதலுக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.