ஆஸ்திரேலியாவில் மனைவி, குழந்தைகளைக் கொலை செய்த முன்னாள் ரக்பி வீரர் : தன்னைத் தானே கத்தியால் குத்தி, காயப்படுத்தி தற்கொலை
Feb 20 2020 2:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவில் முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் ஒருவர், மனைவி மற்றும் குழந்தைகளை தீ வைத்துக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டின் முன்னாள் ரக்பி விளையாட்டு வீரர் Rowan Baxter, மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், பிரிஸ்பேன் நகரில், குடும்பத்தினருடன் தொர்புகொண்டு பேசியுள்ளார். பின்னர் அவர்களை நேரில் சந்தித்துப் பேசிய போது மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில், காருக்குள் இருந்த குழந்தைகள் மற்றும் மனைவி மீது பெட்ரோலை ஊற்றித் தீவைத்து விட்டு, தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்ட Rowan Baxter, சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தீ காயமடைந்த குழந்தைகள் Lainah, Aailyah, Trey ஆகியோர் காருக்குள்ளேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மனைவி Hannah உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.