கொரோனா வைரசின் பாதிப்பு மிகப்பெரிய அளவில் குறைந்து வருவதாக சீனா அரசு தகவல்
Feb 20 2020 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனா முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்பு மிகப்பெரிய அளவில் குறைந்து வருவதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால், 2,124 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 185-ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கொரோனா வைரசின் பாதிப்பு மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாக, சீன அரசு தெரிவித்துள்ளது. வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில், நேற்று முன்தினம் புதிதாக 1600-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், நேற்று புதிதாக 349 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. எதிர்பாராத வகையில் பாதிப்பு விகிதம் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.