லண்டனில் அறுவை சிகிச்சையின்போது வயலின் வாசித்த பெண் இசைக்கலைஞரின் தலையில் இருந்த கட்டிகள் அகற்றம்
Feb 20 2020 3:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
லண்டனில் இசைக்கலைஞர் ஒருவரின் மூளையில் ஏற்பட்ட கட்டியை மருத்துவர்கள் அகற்றியபோது, அந்த இசைக் கலைஞர் வயலின் வாசித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
லண்டனைச் சேர்ந்த டாக்மர் டர்னர் என்ற 53 வயதான பெண்மணிக்கு கடந்த 2013ம் ஆண்டு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவரது மூளையின் வலது பகுதியில் உருவாகியிருந்த கட்டியே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டது. வயலின் வாசிக்கும் திறனை தான் இழந்துவிடுவோம் என எண்ணிய அவர், கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையை தவிர்த்து வந்தார்.
மூளை செயலில் பாதிப்பை ஏற்படுத்தாதவாறு அறுவை சிகிச்சை செய்யும் யோசனையை அந்த பெண்மணிக்கு லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் கீமார்ஸ் அஷ்கன் கூறியிருந்தார். அதன்படி, மூளையின் வலது பகுதியில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றினர். அறுவை சிகிச்சையின்போது இடது பகுதி மூளைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு மருத்துவர்கள் எச்சரிக்கையாக இருந்ததுடன், அந்த நேரத்தில் டாக்மரை வயலின் இசைக்க செய்தனர். இந்த காட்சி தற்போது சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.