சீனாவை தவிர 28 நாடுகளுக்கு வேகமாக பரவும் கொரோனா வைரஸ் - உலக சுகாதார அமைப்பு கவலை
Feb 22 2020 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவை தாண்டி உலக நாடுகள் பலவற்றுக்கும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவது குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு வெளியில் 28 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் தென்கொரியாவில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருப்பினும், சீனாவுடன் எந்த சம்பந்தமும் இல்லாத ஈரானில் நான்கு பேர் உயிரிழந்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரான் மற்றும் லெபனான் நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றைக் கண்டறியும் வசதிகள் இருக்கின்றன. இருப்பினும், சிகிச்சை அளிக்கும் வசதிகள் இல்லாததால், அவை உலக சுகாதார அமைப்பின் உதவியை நாடியுள்ளன.