கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 360-ஐ எட்டியது - வுஹான் நகரில் சிக்கியுள்ள மீதமுள்ள இந்தியர்களை அனுப்பி வைக்க சீனா முட்டுக்கட்டை
Feb 22 2020 1:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள மீதமுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர தயாராக உள்ள இந்திய விமானப்படை விமானத்திற்கு, வேண்டுமென்றே அனுமதி வழங்காமல், சீனா இழுத்தடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படையின் C-17 Globemaster விமானம், மருந்து, மாத்திரைகளுடன் சீனா சென்று, வுஹான் நகரில் வழங்கிவிட்டு, அங்கு சிக்கியுள்ள மீதமுள்ள இந்தியர்களையும் மீட்டு வரும் என்று கடந்த 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விமானத்திற்கு சீனா வேண்டுமென்றே அனுமதி வழங்காமல் தாமதித்து வருவதாகக் கூறப்படுகிறது. நிவாரண உதவி வழங்கும் விமானத்தை அனுமதிக்க மறுப்பதன் மூலம், இந்தியாவின் உதவியை ஏற்க சீனா மறுக்கிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, வுஹான் நகரில் மீதமுள்ள 80 இந்தியர்களையும் இந்தியா அனுப்பி வைப்பதற்கு, இரு நாடுகளின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேசி வருவதாகவும், இந்திய மீட்பு விமானத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏதும் இல்லை என்றும் சீன வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.