கொலம்பியாவில் அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு : 3 லட்சம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
Feb 22 2020 1:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொலம்பியாவில், அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 3 லட்சம் ஆசிரியர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். கொலம்பிய அரசு, அண்மையில் அமல்படுத்தியுள்ள புதிய பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசு துறையினரும் போராட்டத்தில் இறங்கி வருவதால், போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இதற்கிடையே, சுமார் 3 லட்சம் ஆசிரியர்களும், 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தின்போது, சாலையில் ஆடல், பாடல்களிலும் ஆசிரியர்களும் ஈடுபட்டனர்.