ஆப்பிரிக்க நாடுகளை தொடர்ந்து பாகிஸ்தானிலும் பரவும் லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் : விளைச்சல் பெருமளவு குறையும் அபாயம்
Feb 22 2020 1:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆப்பிரிக்க நாடுகளை தொடர்ந்து, வெட்டுக்கிளிகளின் தாக்குதல், பாகிஸ்தானிலும் பரவி வருவதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் தற்போது லோகஸ்ட் வெட்டுக்கிளிகள் வேகமாகப் பரவி வருகின்றன. ஒகாரா மாவட்டத்தின் பெரும் பகுதிகளில், விவசாயிகள், உருளைக் கிழங்கு சாகுபடி செய்துள்ள நிலையில், இப்பகுதியில் பரவியுள்ள வெட்டுக்கிளிகள், பயிர்களில் உள்ள இலைகளை முழுமையாகச் சேதப்படுத்திவிட்டன. இதனால் விளைச்சல் பெருமளவு குறைந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தினமும் காலையில் 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகமாகக் காணப்படுவதாகக் கூறும் விவசாயிகள், விதவிதமாக ஒலி எழுப்பி, அவற்றை விரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.