வுஹான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க எந்த முட்டுக்கட்டையும் இல்லை - சீன அரசு விளக்கம்
Feb 22 2020 4:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வுஹான் நகரில் சிக்கியுள்ள மீதமுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்கு, சீனா அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாக வெளியான தகவலை, அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
இந்திய விமானப்படையின் C-17 Globemaster விமானம், மருந்து, மாத்திரைகளுடன் சீனா சென்று, வுஹான் நகரில் வழங்கிவிட்டு, அங்கு சிக்கியுள்ள மீதமுள்ள இந்தியர்களையும் மீட்டு வரும் என்று கடந்த 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த விமானத்திற்கு சீனா வேண்டுமென்றே அனுமதி வழங்காமல் தாமதித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து விளக்கமளித்த, சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், இந்தியாவுக்கு அனுமதி மறுப்பதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, இரு நாட்டு அதிகாரிகளும் பேசி வருவதாகவும், சீனாவில் இந்தியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.