சிலியில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை : தண்ணீரை பீய்ச்சி அடித்து போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு
Feb 23 2020 6:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிலி நாட்டில், போக்குவரத்து கட்டண உயர்வைக் கண்டித்து, பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
சிலி நாட்டில், போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து, கடந்த அக்டோபர் மாதம் முதல், அரசுக்கு எதிராக அந்நாட்டு பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சான்டியாகோ நகரில் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. பாதுகாப்பு வாகனங்கள் மீது போலீசார் கற்கள் உள்ளிட்டவற்றை வீசி எறிந்தனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, தண்ணீரை பீய்ச்சி அடித்த போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்ததால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.