சீனாவுக்கு இந்தியா சார்பில் மருத்துவ உபகரணங்கள் : விமானப்படையின் சி-17 போயிங் விமானம் மூலம் தயார்
Feb 23 2020 6:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சீனாவின் வூகான் நகருக்கு மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் போன்றவை இந்திய விமானப்படையின் சி-17 போயிங் விமானம் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியா வர பதிவு செய்துள்ள 100 இந்தியர்களையும் இந்த விமானம் வூகான் நகரில் இருந்து தாயகம் அழைத்து வர உள்ளது. மேலும், சீனாவின் வூகானுக்குப் ராணுவ விமானம் மூலம், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் போன்றவை அனுப்பி வைக்கப்படவுள்ளன. டெல்லியை அடுத்த காசியாபாத் அருகே ஹில்டன் விமானப் படைத்தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த விமானம் மருந்துகள் மற்றும் நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.