தென்கொரியா, ஈரானில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் : ஈரான்- 8 பேர் பலி, தென்கொரியா - 5 பேர் பலி, இத்தாலி - 3 பேர் பலி
Feb 24 2020 11:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவை அச்சுறுத்திய கொரோனா வைரஸ், அடுத்ததாக தென்கொரியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 2 ஆயிரத்து 592 பேர் உயிரிழந்துள்னர். அடுத்தபடியாக ஈரானில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், 43 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர், 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் கியோங்சாங் மாகாணத்தில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. அங்கு 5 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 556-ஆக உயர்ந்துள்ளது. தென்கொரியாவில் வைரஸ் தீவிரமாக பரவுவதால், தடுப்பு நவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.