ஆளும் கட்சிக்கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் : மலேசிய பிரதமர் மகாதிர் முகமது ராஜினாமா
Feb 25 2020 9:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆளும் கட்சிக் கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக மலேசிய பிரதமர் மகாதிர் முகமது தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
மலேசியாவில் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி மற்றும் மக்கள் நீதிக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு பகதான் ஹரப்பன் என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சியில் அமர்ந்தனர். 94 வயதான மகாதிர் இரண்டாவது முறையாக 2018-ஆம் ஆண்டில் மலேசிய பிரதமராகப் பதவியேற்றார். தற்போது இந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மகாதிர் முகமதுவிற்கு கொடுத்த ஆதரவை மக்கள் நீதிக் கட்சி திரும்ப பெற்றுள்ளது. இதையடுத்து, தனது பிரதமர் பதவியை மகாதிர் முகமது ராஜிநாமா செய்துள்ளார். அவரது ராஜிநாமாவை மலேசிய மன்னர் ஏற்றுகொண்டார். புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரை இடைக்கால பிரதமராக செயலாற்றும்படி அவரிடம் மன்னர் தெரிவித்துள்ளார்.