கொரோனா பீதியால் தென்கொரியாவில் பள்ளிகளுக்கு விடுமுறை - கால்பந்து போட்டிகள் ரத்து - முகமூடிகளை வாங்க வரிசையில் காத்து நின்ற பொதுமக்கள்
Feb 25 2020 2:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென் கொரியாவில், 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவுவதால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக, தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 893 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள டேகு நகரில்தான், அதிகமானோர் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நேற்று மட்டும் அந்நகரில் இரண்டு பேர் பலியாகினர். வைரஸ் வேகமாக பரவுவதால், தென் கொரியாவில் தொடங்கவிருந்த சர்வதேச கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன; பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் முகமூடிகளை வாங்குவதற்காக நீண்ட தூரத்துக்கு பொதுமக்கள் வரிசையில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.