ஜப்பான் கப்பலில் இந்தியர்கள் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு : கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்வு
Feb 25 2020 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பான் நாட்டின் Diamond Princess சொகுசு கப்பலில் பயணித்த மேலும் 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ஹாங்காங்கில் இருந்து 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கடந்த 4-ம் தேதி ஜப்பான் யோகோஹாமா துறைமுகத்துக்கு வந்த சொகுசு கப்பலில் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, வைரஸ் தொற்று இல்லாதவர்கள் மட்டும் கப்பலில் இருந்துவெளியேற்றப்பட்டனர். இந்தக் கப்பலில் 138 இந்தியர்கள் பயணம் செய்த நிலையில், அவர்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4-ஆக உயர்ந்துள்ளது. கப்பலில் மொத்தம் 691 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக ஜப்பான் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.