உலக நாடுகளையும் பீதிக்குள்ளாக்கிய கொரானோ வைரஸ் : சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 2,700-ஆக உயர்வு
Feb 26 2020 12:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 700-ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. சீனா மட்டுமின்றி உலக நாடுகளையும் பீதிக்குள்ளாக்கிய கொரானோ வைரஸ் தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது, கொரோனாவின் வீரியம் குறையத் தொடங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில்,
பலி எண்ணிக்கை அச்சப்படும் அளவிலேயே உள்ளது. இதுவரை கொரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 700-ஆக உயர்ந்துள்ளது.