சீனாவில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை : நாளை சீனா செல்கிறது ராணுவ விமானம்
Feb 26 2020 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவின் வுகான் நகரில் சிக்கியவர்களை மீட்க, இந்தியாவின் மிகப்பெரிய போர் விமானம் இன்று சீனா செல்கிறது.
ஏற்கெனவே இந்தியர்கள் பலர் அங்கிருந்து மீட்கப்பட்டிருக்கும் நிலையில், மேலும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் வுகான் நகரில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்க சி-17 குளோபல் மாஸ்டர் என்ற மிகப்பெரிய ராணுவ விமானத்தை, அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த விமானத்தின் மூலம், சீனாவுக்கு மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்களை அனுப்பவும் மத்திய அரசு முன்வந்தது. இதையடுத்து மருந்துபொருட்களை ஏற்றிக்கொண்டு, இந்திய ராணுவ விமானம் நாளை சீனா செல்கிறது. இந்த விமானம் மூலம், நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.