தென்கொரியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி - மக்கள் மத்தியில் பெரும் பீதி
Feb 26 2020 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்கொரியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
சீனாவைத் தொடர்ந்து, தென்கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டின் Daegu மற்றும் Cheongdo நகரில் நோய்த் தொற்று அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இதுவரை அங்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 977-ஆக இருந்தது. இந்த நிலையில், மேலும் 169 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, தென் கொரியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 146-ஆக உயர்ந்துள்ளது. Daegu மற்றும் Cheongdo நகரில் வைரஸ் அசுர வேகத்தில் பரவுவதால், அப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.