"ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா" - கட்டுரை எதிரொலி : அமெரிக்க பத்திரிகையாளர்கள் சீனாவை விட்டு வெளியேற்றம்
Feb 26 2020 2:11PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
"ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்ட அமெரிக்க பத்திரிகையாளர்கள் சீனாவை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்ற அமெரிக்க பத்திரிக்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான சிறப்பு கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. "ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா" என்ற தலைப்பில் வெளியான அந்த சிறப்பு கட்டுரையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில், சீனா சரிவர செயல்படவில்லை என எழுதப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த சீன அரசு, கட்டுரையை வெளியிட்ட பத்திரிகையாளர்களை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, பத்திரிகையின் துணை தலைமை செய்தி ஆசிரியரான அமெரிக்காவைச் சேர்ந்த ஜோஷ் சின், செய்தி சேகரிப்பாளர் சோ டேங்க் மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மற்றொரு செய்தி சேகரிப்பாளர் பிலிப் வெங் ஆகியோர் சீனாவை விட்டு வெளியேற்றப்பட்டனர்