அமெரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு : 7 பேர் பலி
Feb 27 2020 1:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள பீர் தயாரிப்பு தொழிற்சாலையில் முன்னாள் தொழிலாளி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தின் Milwaukee நகரில் உள்ள மதுபான விடுதியில் வழக்கம்போல வாடிக்கையாளர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது ஊழியர் ஒருவர் திடீரென தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுடத்தொடங்கினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் அந்த நபர், தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை.