அரச அடைமொழியோடு தன்னை அழைக்க வேண்டாம் - பெயரை சொல்லி அழைத்தால் போதும் - ஹாரி அன்பு வேண்டுகோள்
Feb 27 2020 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தயவுசெய்து யாரும் அரச அடைமொழியோடு அழைக்க வேண்டாம் என, ஹாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் நடைபெற்ற, சுற்றுலா மாநாடு ஒன்றில் ஹாரி பங்கேற்று பேசினார். அப்போது, தன்னை இனி அரச குடும்ப அடைமொழியோடு அழைக்க வேண்டாம் என்றும், அந்த நடைமுறையை முற்றாக கைவிடுமாறும், ஹாரி கேட்டுக் கொண்டார். இளவரசர் என கூறுவதைத் தவிர்த்து, தனது பெயரை மட்டுமே குறிப்பிட்டு அழைக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், அதுவே போதுமானது என்றார். அரசு குடும்பத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாகவும், இது தொடர்பாக கடந்த மாதத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.