சீனாவைத் தொடர்ந்து தென்கொரியாவில் தீவிரமடையும் கொரோனா : பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு - 1595 பேருக்கு வைரஸ் பாதிப்பு
Feb 27 2020 6:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்கொரியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஆயிரத்து 500-ஐ கடந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சீனாவைத் தொடர்ந்து, தென்கொரியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டின் Daegu மற்றும் Cheongdo நகரில் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. தென்கொரியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 146-ஆக இருந்தது. இந்த நிலையில், மேலும் 334 பேருக்கு வைரஸ் தொற்று இருப்புது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை, ஆயிரத்து 595-ஆக உயர்ந்துள்ளது. வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அந்நாட்டு சுகாதாரத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.