தாய்லாந்து நாட்டில் சாலையில் சென்ற வாகனத்தை மறித்து காய்கறிகளை சாப்பிட்ட யானைகள்
Feb 27 2020 6:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாய்லாந்து நாட்டில் சாலையில் சென்ற வாகனத்தை மறித்த யானைகள் அதிலிருந்த உணவுப் பொருட்களை உண்டன.
சச்சோயங்சாவோ பகுதியில் இரண்டு காட்டு யானைகள் சாலையின் நடுவே வந்ததைக் கண்ட வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை பாதியிலேயே நிறுத்தி விட்டுச் தப்பிச் சென்றனர். அப்போது அந்த வாகனத்தில் உணவுப் பொருள் இருப்பதைக் கண்ட யானைகள் அதனை எடுத்து சாப்பிடத் தொடங்கியது. இறுதியில் காய்கறிகள் வைக்கப்பட்ட மூட்டையை எடுத்து சாலையில் வீசியது. இந்த வீடியோ காட்சி அந்நாட்டு ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.