சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,744-ஆக உயர்வு
Feb 27 2020 7:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 2,744-ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளுக்கும் பரவியயுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை 2,744-ஆக உயர்ந்துள்ளது. மேலும் 433 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78,497-ஆக அதிகரித்துள்ளது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வந்த நிலையில், நேற்று 29 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். வைரசின் தாக்கம் கடந்த சில வாரங்களாக வெகுவாக குறைந்து வருவதாகவும், ஆயிரக்கணக்கானோர் குணமடைந்து வருவதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.