பாகிஸ்தானில் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க சீனா 1 லட்சம் வாத்துக்கள் அனுப்பி வைப்பு
Feb 28 2020 9:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானில் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க சீனாவில் இருந்து 1 லட்சம் வாத்துக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
பாகிஸ்தான் நாட்டின் தெற்கு மாகாணமான, சிந்து முதல் வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துவா வரையிலான பல்வேறு பகுதிகளில், விவசாயிகள் பயிரிட்டுள்ள கோதுமை உள்ளிட்ட பயிர்களை, வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகின்றன. 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வெட்டுக்கிளிகள் தாக்கம் அதிகமாக உள்ளதால், லட்சக்கணக்கான ஹெக்டெர் விவசாய நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு படையெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வெட்டுக்கிளி படையெடுப்பை தடுப்பதற்கு, சீனாவில் விசேஷமாக வளர்க்கப்படும் 1 லட்சம் வாத்துகள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுகிறது. இதனை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.