ட்ரம்பின் இந்தியப் பயணம் - இரு நாடுகள் இடையிலான உறவில் மிகச்சிறந்த முன்னேற்றம் : அமெரிக்கா கருத்து
Feb 28 2020 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டொனால்டு ட்ரம்பின் இந்திய வருகையையடுத்து, இரு நாடுகள் இடையிலான உறவில் மிகச்சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் இந்திய வருகை தந்தது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த பயணத்தால் இந்தோ - பசிபிக் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் அபாரமான வளர்ச்சி ஏற்படும் என்றும் அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க காங்கிரஸ் பிரதிநிதிகள் மற்றும் எம்.பி.க்கள், வரும் ஏப்ரல் மாதம் இந்தியா வர இருப்பதாகவும் ட்ரம்ப் அரசு கூறியுள்ளது.
இதனிடையே, இந்தியா-அமெரிக்கா இடையே மிகவும் எதிர்ப்பார்க்கப்படும், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது. இரட்டை வரி விதிப்பு முறையில் இருந்து இந்தியர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையிலான ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.