அரச குடும்பத்திலிருந்து விலகிவிட்டதால் தன்னை இனி இளவரசர் என அழைக்க வேண்டாமென ஹாரி வேண்டுகோள்
Feb 28 2020 9:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹாரி - மேகன் தம்பதி, அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவதாக கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ராணி 2-ம் எலிசபெத்தின் ஒப்புதலுடன், ஹாரி - மேகன் தம்பதி, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் குடியேறினர். அடுத்த மாதம் 31-ம் தேதி அரச குடும்பத்தில் இருந்து முறைப்படி வெளியேறுகின்றனர். இந்நிலையில், ஸ்காட்லாந்து தலைநகர் எடின்பர்க்கில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஹாரி, தன்னை இங்கிலாந்து அரச குடும்ப அடைமொழியுடன், இளவரசர் என யாரும் அழைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். தன்னுடைய பெயரை மட்டும் குறிப்பிட்டு அழைத்தால் போதும் என்றும் கூறியுள்ளார்.