கொரோனா எதிரொலியாக பொருளாதாரத்தில் கடும் நெருக்கடி : 3000 பணியாளர்களை நீக்கப்போவதாக தைசன்கிரப் அறிவிப்பு
Mar 27 2020 1:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா எதிரொலியாக 2026ம் ஆண்டுக்குள் மூன்றாயிரம் பணியாளர்களை நீக்கம் செய்யவுள்ளதாக தைசன்கிரப் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தைசன்கிரப் நிறுவனம் எலிவேட்டர், நீர்மூழ்கிக் கப்பல் போன்றவற்றை தயாரித்து வருகிறது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இதன் கிளை செயல்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச பொருளாதாரம் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக தங்களின் ஸ்டீல் பிரிவில் உள்ள உள்ள மூன்றாயிரம் பணியிடங்களை குறைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளில் 2 ஆயிரம் பணியாளர்களையும் 2026ம் ஆண்டுக்குள் 1000 பணியாளர்களையும் நீக்கப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.