உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்தது - பலி எண்ணிக்கை 27,438-ஆக அதிகரிப்பு
Mar 28 2020 3:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகளவில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 438 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது.
கொரோனா வைரசால் இத்தாலியில் 9 ஆயிரத்து 134 பேரும், சீனாவில், 3 ஆயிரத்து 295 பேரும், ஸ்பெயினில் 5 ஆயிரத்து 138 பேரும், ஈரானில் 2 ஆயிரத்து 378 பேரும், அமெரிக்காவில் ஆயிரத்து 704 பேரும், பிரான்ஸில் ஆயிரத்து 995 பேரும், பிரிட்டனில் 759 பேரும், நெதர்லாந்தில் 546 பேரும், ஜெர்மனியில் 342 பேரும், பெல்ஜியத்தில் 289 பேரும் பலியாகியுள்ளனர். இத்தாலியில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 919 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 773 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் சுமார் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளி இத்தாலி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 87 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகளவில், 6 லட்சத்து ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 33 ஆயிரத்து 454 பேர் குணமடைந்துள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.