கொரோனா வைரசால் அதிகரிக்கும் பாதிப்புகள் - உலக நாடுகள் உண்மையை மறைப்பதாக அதிர்ச்சித்தகவல்
Mar 30 2020 3:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையை உலக நாடுகள் குறைத்து சொல்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிவுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது சுமார் 200 நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அமெரிக்காவில் மட்டும், கொரோனா தொற்றால் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை, 20 சதவீத அளவுக்கும் குறைவாகத்தான் உலக நாடுகள், வெளி உலகிற்கு சொல்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகிவுள்ளது. 20 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் எண்ணிக்கை வெளியே வருவதென்பது, ஐந்தில் ஒருவர் பற்றிய தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.