உலக அளவில் 37 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை : ஸ்பெயினில் ஒரே நாளில் 913 பேர் உயிரிழப்பு
Mar 31 2020 10:35AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது.
கொரோனா வைரசால், ஐரோப்பிய கண்டம் பேரழிவை சந்தித்துள்ளது. இத்தாலியில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்டோர் உயிழந்த நிலையில், அந்நாட்டில் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. 11 ஆயிரத்து 592 பேர் இத்தாலியில் கோரோனா காரணமாக உயிரிழந்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டில், உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் அங்கு 912 பேர் வைரசுக்கு பலியாகிவிட்டனர். அவர்களுடன் சேர்த்து, ஸ்பெயினில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 716-ஆக உயர்ந்துவிட்டது. இது, கொரோனா வைரஸ் உருவான சீனாவின் உயிரிழப்பைவிட 2 மடங்குக்கும் அதிகமாகும்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 580 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை மூன்று ஆயிரத்தை கடந்தது. பிரான்ஸில் நேற்று 418க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை மூன்று ஆயிரத்தை கடந்தது.
ஈரானில் 117 பேர் உயிரிழந்துவிட்டனர். இவர்களுடன் சேர்த்து, அந்நாட்டில் கொரோனா வைரசுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 757-ஆக உயர்ந்துவிட்டது. ஈரான் முழுவதும் 41 ஆயிரத்து 495 பேர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் Kianoush Jahanpour, தலைநகர் Tehran-ல் இன்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் அளிக்கும் வகையில் 13 ஆயிரம் கோடி டாலர் உதவித் திட்டத்தை, ஆஸ்திரேலியப் பிரதமர் Scott Morrison இன்று அறிவித்துள்ளார்.