கொரோனா தொற்றால் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த இளவரசர் சார்லஸ் : உடல் நலம் தேறிவருவதாக மருத்துவர்கள் தகவல்
Mar 31 2020 11:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தொற்று காரணமாகத் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்த இளவரசர் சார்லஸ் தேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 5 தினங்களுக்கு முன்னர் பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 71 வயதான இளவரசர் சார்லஸுக்கு கொரோனாவின் லேசான அறிகுறிகள் இருப்பதாகவும் மற்றபடி அவர் ஆரோக்கியமாகவே இருப்பதாகவும், சார்லஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இளவரசர் சார்லஸ் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது துணைவி கமிலாவுக்கு கொரோனா தொற்று இல்லாத போதும், அரசு மற்றும் மருத்துவ அறிவுறுத்தலின்படி, இருவரும் ஸ்காட்லாண்டில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டனர். இந்நிலையில் இளவரசர் சார்லஸைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உடல் நலம் தேறிவருவதாக தெரிவித்தனர்.