இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இல்லை - பரிசோதனை முடிவில் உறுதி
Mar 31 2020 1:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோர் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவின் நெருங்கிய உதவியாளர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெஞ்சமின் நெதன்யாஹூ தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய பிற உதவியாளர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில், நெதன்யாஹூ உள்ளிட்ட யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.