உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 42 ஆயிரத்து 334 ஆக உயர்வு - சுமார் 8 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு பாதிப்பு
Apr 1 2020 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 334 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 334 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 59 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 578 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 54 ஆக உயர்ந்துள்ளது. அடுத்ததாக இத்தாலியில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 792 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை 12 ஆயிரத்து 428 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 125 பேர், பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.