கொரோனா பாதிப்பால் கிழக்கு ஆசியா, பசிபிக் நாடுகளில் 1 கோடியே 10 லட்சம் மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் : உலக வங்கி வெளியீடு
Apr 1 2020 5:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பாதிப்பால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில், ஏற்கனவே கணிக்கப்பட்டதை காட்டிலும் மேலும் ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்ற அதிர்ச்சியூட்டு தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ், தற்போது சுமார் 200 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலக அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த பொருளாதார வீழ்ச்சியால், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில், ஏற்கனவே கணித்ததை விட கூடுதலாக ஒரு கோடியே 10 லட்சம் மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரித்துள்ளது.
இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2019-ம் ஆண்டில் 5 புள்ளி 8 சதவீதமாக இருந்த நிலையில், 2020-ம் ஆண்டில், 2 புள்ளி 1 சதவீதமாக சரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.