இத்தாலியில் வீடற்றவர்களின் உடல் நிலை குறித்து தன்னார்வ அமைப்புக்கள் பரிசோதனை
Apr 5 2020 2:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இத்தாலியின் ரோம் நகரில் வீடற்றவர்களின் உடல் நிலை குறித்து தன்னார்வ அமைப்புக்கள் இணைந்து பரிசோதனை நடத்திவருகின்றன.
இத்தாலியின் ரோம் நகரில் ஏராளமான ஏழை பொதுமக்கள் வீடற்ற நிலையில் சாலையோரங்களில் வசித்துவருகின்றனர். தற்போது கொரோனா அச்சம் நிலவுவதால் இவர்கள் அனைவரும் பல்வேறு சமூகக் கட்டடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்களுடைய உடல்நிலை குறித்து இன்டர்சாஸ் அமைப்பும், பிற அரசு சாரா உதவி அமைப்புக்களும் பரிசோதனை நடத்திவருகின்றன. அவர்களுடைய உடல் வெப்ப பரிசோதனையில் தொடங்கி, சுற்றுப் புறத்தைச் சுகாதாரமாக வைத்துக்கொள்ளுதல், கை கழுவுதல் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.