ஸ்பெயினில் 4-வது வாரத்தை நோக்கிச்செல்லும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க அரசு பரிசீலனை
Apr 5 2020 3:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஸ்பெயினில், கொரோனா அச்சுறுத்தலால் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு உத்தரவு, 4ஆவது வாரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
ஸ்பெயினில், மார்ச் 14ஆம் தேதி முதல், 15 நாட்களுக்கு கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, ஏப்ரல் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவை, மேலும் நீட்டிக்க, அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது. இதனால், வழக்கமாக சுற்றுலா பயணிகளின் வருகையால் ஆரவாரத்துடன் காணப்படும் மாட்ரிட் நகரம், களையிழந்து காணப்படுகிறது. கடைகள், உணவகங்கள், பார்கள் என அனைத்தும் மூடப்பட்டிருப்பதால், நகரமே வெறிச்சோடி கிடக்கிறது. பணி நிமித்தமாக வெளியே செல்ல, சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், நாட்டின் அனைத்து பகுதிகளும், மக்கள் நடமாட்டமின்றி முடங்கி உள்ளன.